தொழிலாளியிடம் இரண்டு பவுன் நகை வழிப்பறி செய்த வழக்கில் போலீஸ்காரர் உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பனங்காட்டூரைச் சேர்ந்தவர் எல்லப்பன் வயது 56 இவர் செப்டிக் டேங்க் கழிவுகளை விவசாய நிலங்களுக்குள் விடும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் எல்லப்பன் கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி மதியம் 3 மணி அளவில் ஓமலூர் அடுத்த கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் செப்டிக் டேங்க் கழிவுகளை விட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் எல்லப்பன் இ டம் தகராறில் ஈடுபட்டு மிரட்டி அவரிடம் இருந்த இரண்டு பவுன் தங்க மோதிரத்தை பறித்துக் கொண்டு சென்றனர் இதுகுறித்து எல்லப்பன் அளித்து புகார் படி ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையின் முடிவில் நேற்று ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சத்தியராஜ் வயது 31 இளங்கோ வயது 28 வெண்ணந்தூரைச் சேர்ந்த அஜித்குமார் வயது 27 சேலம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ்காரர் சிவக்குமார் வயது 25 ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சேலம் சூரமங்கலம் போலீஸ் கார் சிவகுமாரை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அணில் குமார் கிரி சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். வழிப்பறியில் போலீஸ்காரர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.