மயிலாடுதுறை அருகே பிரபல ரௌடி வெட்டி கொலை:- ஒருவர் சரண் அடைந்துள்ள நிலையில் மணல்மேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆத்தூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சுமன்( 48) இவர் மீது ஆத்தூர் பாலையா கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்குகள், அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் சுமன் ஆத்தூர் மெயின் ரோடு பாலம் அருகே வண்டியில் சென்றபோது மர்ம நபர் வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீஸார் சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடலங்குடியைச் சேர்ந்த முரளி என்ற இளைஞர் மணல்மேடு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மற்றும் சிலரை பிடித்து மணல்மேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் பிரபல ரவுடி சுமன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
