பா.ம.க. சேரும் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “எந்த அணியுடன் பா.ம.க. இணையுகிறதோ, அந்த அணி இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெறும்,” என்று தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஆகஸ்ட் 10ம் தேதி வன்னியர் மகளிர் பெருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விழா நடைபெறும் மைதானத்தை இன்று (ஜூலை 11) ராமதாஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“பூம்புகாரில் இதுவரை 13 முறை வன்னியர் மகளிர் மாநாடு நடைபெற்றுள்ளது. சிறிது இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் மகளிர் பெருவிழா நடைபெறவுள்ளது. பெண்மையை போற்றும் வரலாற்று சிறப்புமிக்க இந்த விழாவை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம். கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அதிகமாக இருந்தால், கல்விக்காக பயன்படுத்துவதில் தவறில்லை.”

தொடர்ந்து, “பா.ம.க. எந்த கூட்டணியுடன் இணையுகிறதோ, அந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். தற்போது பா.ம.க.வில் எந்தவித குழப்பமும் இல்லை. தொண்டர்களிடையே ஒருமித்த உள்ளமை நிலவுகிறது,” என்றார்.

அன்புமணி இந்த மாநாட்டில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, “போக போகத் தான் தெரியும்” என பாடல் வரியுடன் பதிலளித்தார்.

அதேபோல், தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு, “பத்து காக்கா பறந்தது… அதில் ஐந்து வெள்ளை காக்கா… அது தான் நான் சொல்லி இருக்கும் போல,” எனக் குறிப்பிட்டும், சிரித்தபடியும் பதிலளித்தார்.

Exit mobile version