ஜி – 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 4 நாள் கனடா – சைப்ரஸ் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 15 ஆம் தேதி முதல் 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக கனடா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்குச் செல்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஜூன் 16 மற்றும் 17 தேதிகளில் கனடாவில் நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகள் அடங்கும். இந்த நாடுகள் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து ஆலோசித்து, உலகளாவிய வளர்ச்சிக்கான தீர்வுகளை முன்வைக்கும்.

2025 ஆம் ஆண்டுக்கான ஜி-7 உச்சி மாநாடு, ஜூன் 15 முதல் 17 வரை கனடாவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று மோடி கனடா பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்த உச்சிமாநாட்டில், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, புதுமை உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும், பிரதமர் மோடி பல உலக தலைவர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகளும் நடத்த உள்ளார்.

பின்னர், பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் சைப்ரஸுக்கு செல்லும் முக்கியமான சந்தர்ப்பமாகும். அந்நாட்டு தலைவர்களுடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

Exit mobile version