கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஏமாற்றுவதாகவும்,மிரட்டுவதாகவும் நடவடிக்கை எடுக்க மனு

மயிலாடுதுறை கிரிக்கெட் சங்கத்தினர் கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஏமாற்றுவதாகவும், எதனால் என்று கேள்வி கேட்பவர்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி கிரிக்கெட் வீரர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு;-

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மயிலாடுதுறை கிரிக்கெட் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு 15 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதே போல் 23 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த சங்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறும் எலைட் கிரிக்கெட் கிளப் என்ற அணி வீரர்கள், தங்களிடம் அதிக அளவில் கிரிக்கெட் வீரர்கள் உள்ளதால் கூடுதலாக ஒரு அணி வேண்டும் என்று சங்கத்தில் நேரடியாகவும் தபால் மூலமாகவும் கடந்த ஒன்றரை வருடமாக அணி ஒதுக்கீடு செய்து தரக் கோரி கேட்டுள்ளனர். ஆனால் கிரிக்கெட் சங்கத்தினர் மேலும் கிரிக்கெட் அணியை சேர்க்க இயலாது என்று மறுத்துள்ளனர். எந்த அடிப்படையில் கிரிக்கெட் சங்கம் அமைக்கப்பட்டது என்றும், கிரிக்கெட் வீரர்கள் நிறையபேர் விளையாட ஆர்வமாக உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் அணி உருவாக்க மறுக்கிறீர்கள் என்று நேரிடையாக சங்க நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்து கிரிக்கெட் விளையாட முடியாமல் செய்துவிடுவதாக சங்கத்தினர் மிரட்டல்’ விடுப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிரிக்கெட் வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து கிராமப்பற கிரிக்கெட் வீரர்களுக்கு அனைவருக்கும் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனையில் அங்கீகரிக்கப்பட்ட எலைட் கிரிக்கெட் கிளப் அணியை தகுதி நீக்கம் செய்து விட்டதாகவும் தொடர்ந்து இதுபோன்று 300க்கு மேற்பட்ட வீரர்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் அணி ஒதுக்கி தராமல் முறைகேடாக கிரிக்கெட் சங்கம் என்ற பெயரில் வீரர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வரும் மயிலாடுதுறை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை கலைத்துவிட்டு புதிய சங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version