ஆளுநர் ரவியின் மாய அரசியலால் மக்கள் மயங்க மாட்டார்கள் – திருமாவளவன் குற்றச்சாட்டு

பெரம்பலூர் :
பெரம்பலூரில் நடைபெற்ற விசிக கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், அங்கு செய்தியாளர்களை சந்தித்து, அரசியல் மற்றும் சமகாலக் கோட்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது :
“திருக்குறளை சனாதனத்தோடு ஒப்பிடுவது தவறான முயற்சி. உலக மக்கள் ஒரே குலம் என்பதையும், சமத்துவத்தைப் போதிப்பதையும் திருக்குறள் வலியுறுத்துகிறது. ஆனால், சனாதனமும் புதிய கல்விக் கொள்கையும், இவை அனைத்திற்கும் நேரெதிரானவை. ஆளுநர் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்பதால், திருக்குறளையும், திருவள்ளுவரையும் சனாதனத்துடன் இணைத்து பேசுகிறார். இது தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கும் ஒரு மாய அரசியல் முயற்சி. ஆனால் இந்த மாய அரசியலால் மக்கள் மயங்க மாட்டார்கள்,” என தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் பக்தர் மோடி? – தேர்தல் அரசியலின் ஒரு பங்கைதான்

மேலும், திருமாவளவன் கூறியதாவது :
“ஓடிசாவில் தமிழர் வெற்றி பெறக் கூடாது என விமர்சித்த அமித்ஷா, இன்று ‘திருவள்ளுவர் பக்தர் மோடி’ என கூறுவது தேர்தல் அரசியலுக்கான கருத்து மட்டுமே. இது உண்மையான அக்கறையை காட்டாது. அதிமுக தலைமையின் நிலை தெளிவாகக் கூறப்படாத நிலையில், பாஜக கூட்டணியின் தொடர்ச்சி குறித்து சந்தேகம் எழுகிறது. அதில் இணைய அதிரடிப் பேசும் வார்த்தைகளை பாஜக பயன்படுத்துகிறது.”

“ஊழல் நடந்ததற்கான ஆதாரம் இருந்தால் அம்பலப்படுத்தட்டும்”

“தமிழகத்தில் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் காலூன்றக் கூடாது என்பதே எங்கள் திடமான நிலைப்பாடு. தனிப்பட்ட லாபம் அல்லது பதவிக்காக அல்ல, ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கவே நாங்கள் போராடுகிறோம். ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தால், அதிகாரம் உள்ளவர்கள் அதை சட்டப்படி அம்பலப்படுத்த வேண்டும். ஆனால், அரசியல் கணக்குச் சதி மூலம் குற்றச்சாட்டு வைக்கக் கூடாது,” எனக் கூறினார்.

Exit mobile version