பத்து ரூபாய் சிக்கன் பிரியாணி வாங்க அலைமோதிய மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்ற மக்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்பேத்கர் சிலை அருகில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் புதிதாக பிரியாணி கடை இன்று துவக்கப்பட்டது துவக்க விழா சலுகையாக இன்று ஒரு நாள் மட்டும் பகல் 12 மணி முதல் 2 மணி வரை ஒரு சிக்கன் பிரியாணி பொட்டலம் பத்து ரூபாய்க்கு விற்பனை என விளம்பரம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இன்று காலை முதலே ஆண்கள் பெண்கள் என தனித்தனி வரிசையில் மக்கள் காத்திருந்தனர் அதனை தொடர்ந்து சரியாக 12 மணிக்கு சிக்கன்பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் பத்து ரூபாய் முட்டையுடன் சிக்கன் பிரியாணியை வாங்கிச் சென்றனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்

Exit mobile version