கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சி கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் 80 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அவதி; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்:-

மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சி கிடாய்த்தலைமேடு கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ள நிலையில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக 70 குடும்பத்தினர் பயன் பெற்று வருகின்றனர். மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட அடைப்பு காரணமாக இதுவரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக கிராம மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வயலுக்கு நீர்பாய்ச்சும் போர்வெல்லில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கும், மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமிலும் மூன்று முறை புகார் தெரிவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசு ஒரு வார காலத்துக்குள் பிரச்சனையை சரி செய்து தங்கள் பகுதிக்கு தடையில்லா குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட மருக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக போலியாக பதில் மனு அளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை தங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் பகுதிக்கு இரண்டு பேருந்து சேவை மட்டுமே உள்ளதால், கூடுதல் போக்குவரத்து சேவையை ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version