இந்திய -அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை பிப்ரவரி நாளை 15 ந் தேதி தீயிட்டு கொளுத்துங்கள் P.R.பாண்டியன் வேண்டுகோள்

இந்திய -அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை பிப்ரவரி நாளை 15 ந் தேதி அனைத்து கிராமங்களிலும் தீயிட்டு கொளுத்துங்கள் விவசாயிகளுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்…

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், ஐக்கிய விவசாயிகள் சங்கம் (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது நெல் கொள்முதல் நிலையங்களில் 2 கிலோ வரையிலும் கூடுதல் எடை வைத்து கொள்முதல் செய்வது வருகிற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக ஆய்வு செய்து எடை ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் கொள்முதல் நிலைய அலுவலர்களை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். மத்திய அரசு அமெரிக்காவோடு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இந்திய வேளாண் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு 18 சதவீதம் இறக்குமதி வரி விதித்த அமெரிக்காவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யக்கூடிய பால், சோளம் உள்ளிட்ட வேளாண் உணவு பொருட்கள் தமிழகத்தில் வரி இல்லாமல் இறக்குமதி செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகள் அழிவு பாதைக்கு செல்ல நேரிடும். மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் சந்தைப் படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் தற்கொலைகளுக்கு தள்ளப்படுவார்கள். எனவே உடனடியாக மத்திய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.இந்திய விவசாயிகளுக்கு பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் ஏற்க முடியாது. எனவே இதனை கண்டிக்கும் வகையில், திரும்ப பெற வலியுறுத்தியும் வர்த்தக ஒப்பந்த நகலை இந்தியா முழுமையிலும் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் தீயிட்டு கொளுத்த வேண்டும் என தேசிய குழு அறைகூவல் விடுத்துள்ளது. அதனை ஏற்று தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் ஒப்பந்த நகல் தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்

FILE NAME : TVR-14.02.2026-MANNARGUDI PR.PANDIYAN BYTE NEWS.

Exit mobile version