மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் சரியானதாக இருக்க வேண்டும் எனO.S.மணியன் தெரிவித்தார்

மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் சரியானதாக இருக்க வேண்டும் அந்த வகையில் மண்ணைக் காக்கும் சரியான அரசாக பாஜகவும் மக்களை காக்கும் அரசாக அதிமுகவும் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஓ எஸ் மணியன் தெரிவித்தார்

நாகை மாவட்டம் வேதாரணியம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மட்டும் ஜெயலலிதா திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும்போது திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு அறுக்க தெரியாதவன் கையில் ஆயிரம் கரு கருவாய் என்பது பழமொழி அதை நான் நாகரீகமாக சொல்கிறேன் வாக்கே இல்லாத கட்சிகளை கூட்டணியாக கொண்டது திமுக கூட்டணி என்றும் மகத்தான வாக்குகளைப் பெற்ற கட்சிகளை கொண்டு கூட்டணி அமைத்துள்ளோம் என தெரிவித்தார்

வேதாரண்யம் நாகப்பட்டினம் தொகுதி மட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் 234 தொகுதிகளுமே அமோக வெற்றி பெறும் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை தீர்க்கப்படாத பிரச்சனைகள் என்பது மிக மிகக் குறைவு தொடங்கி முடிக்கப்படாத பிரச்சனைகள் அதிகம் அந்த பணிகள் நிறைவு பெற்றால் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் பொருளாதாரப் புழக்கமும் மேம்பாடும் கிடைக்கும் வேதா ஆயத்த ஆடை திட்டத்தைப் பொறுத்தவரை 14 சஏக்கர் நிலம் ஜவுளித்துறை இடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதல் கட்ட பணிக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் கேட்டு மத்திய அரசிடம் அனுப்பப்பட்டு விட்டது அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக தற்போது திமுக அரசு அதனை வலியுறுத்தி பெற முயற்சிக்கவில்லை வேதா ஆயத்த ஆடை பூங்கா கொள்கை அளவில் வெற்றி பெற்றுள்ளது தற்சமயம் நான்கு கம்பெனிகளில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர் முழு அளவில் செயல்படும்போது 24 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் உடனடியாக வேத ஆயத்த ஆடை பூங்கா துவங்கப்படும் இதன் மூலமாக மினி திருப்பூர் என்ற பெருமையை வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி பெரும் என தெரிவித்தார்

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை எம் ஜி ஆர் ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி மீது தொகுதி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் வலுவாக இருக்க வேண்டும் அந்த வரியில் மண்ணை காக்கும் அரசாக பாஜக அரசும் பிரதமர் நரேந்திர மோடி உலகின் தலைசிறந்த பிரதமராக உள்ளார் அதேபோல் கடந்த நான்கே முக்கால் ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து போராடிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்வரும் ஆட்சி மாற்றத்தில் மக்களை காக்கும் அரசாக அதிமுக அரசு இருக்கும் என தெரிவித்தார்

திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு 200 மடங்கு வரை உயர்ந்துள்ளது மக்களை இந்த கஷ்டத்திலிருந்து மீட்பதற்காக தேர்தல் அறிக்கையில் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் இதுவும் திமுக ஆட்சி போல் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Exit mobile version