”பொம்மைகள் முதல் ராணுவ டாங்கிகள் வரை இந்தியா அனைத்தையும் உருவாக்குகிறது. இந்தியா உலகின் தொழிற்சாலையாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை,” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
”ஜெயின் சமூகத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் இந்திய கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. உலகில் மிகவும் கடின உழைப்பாளிகள் என அறியப்படுபவர்கள் ஜெயினர்கள். இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாசாரப் பயணத்தில் ஜெயின் சமூகத்தின் பங்களிப்பு விலைமதிப்பற்றது.
மருத்துவம், விமானம், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஜெயினர்கள் முன்னணியில் உள்ளனர். இந்தியாவில் ஜெயின் மக்கள் தொகை 0.5 சதவீதம் மட்டுமே. இருந்தாலும் அவர்கள் நாட்டின் மொத்த வரி வசூலில் 24 சதவீதம் பங்களித்து வருகின்றனர்.”
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.