போருக்கு முடிவெடுக்க உலக தலைவர்கள் யாரும் கூறவில்லை : லோக்சபாவில் பிரதமர் மோடி திட்டவட்டம் !

புதுடில்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைப் பற்றி லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது, இந்தியா மேற்கொண்ட தாக்குதலை நிறுத்தும்படி எந்த உலகத் தலைவரும் வலியுறுத்தவில்லை என அவர் தெரிவித்தார்.

“பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலால் இனி இந்தியா பயப்படவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்த திட நடவடிக்கைகள் உலக நாடுகளால் புரிந்துகொள்ளப்பட்டன,” என்றார் மோடி.

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியமாக அழித்ததைக் குறிப்பிட்ட பிரதமர், “இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மூன்று படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதனால் வெற்றி கிடைத்தது,” என்றார்.

பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் சில இன்றும் ஐ.சி.யூ.வில் இருக்கின்றன என்றும், இந்தியாவின் பதிலடி பாகிஸ்தானை மண்டியிட வைத்துவிட்டதாகவும் அவர் கூறினார். “22 நிமிடங்களில் பாகிஸ்தானை பதைபதைக்க வைத்தோம். அந்த நாட்டின் ராணுவமே பதிலடி நிறுத்துமாறு கெஞ்சியது. ‘தயவு செய்து நிறுத்துங்கள், இவ்வளவு தாங்க முடியாது’ என கதறியது,” என மோடி வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை எந்த நாடும் கண்டிக்கவில்லை என்றும், ஐ.நா.வில் உள்ள 193 நாடுகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது வெறும் மூன்று நாடுகளே என்றும் மோடி தெரிவித்தார்.

“மாண்பிழைக்கும் ராணுவம் மீது நம்பிக்கை இல்லை”

இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை என குற்றஞ்சாட்டிய பிரதமர், “இந்திய அரசையும், ராணுவத்தையும் குற்றம் கூறும் வகையில் காங்கிரஸ் பேசுகிறது. அவர்கள் என்னையே குறிவைத்து விமர்சிக்கின்றனர். இந்தியா வெற்றி பெறும் என நம்பிக்கை இல்லை என்பதால்தான் இவ்வாறு செய்கிறார்கள்,” என குற்றம்சாட்டினார்.

“ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு விமானப்படையின் பங்கு 100 சதவீதம் இருந்தது. இந்த நடவடிக்கையின் நோக்கம் தெளிவானது — பயங்கரவாதத்தை அழித்தல். அதை இந்தியா வெற்றிகரமாகச் செய்தது,” என்றார் மோடி.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Exit mobile version