தினக்கூலி தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு தினக்கூலி மற்றும் வெளி ஆதாரமுறை தொழிலாளர் சம்மேளம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் முதல் மாநில அமைப்பு நிலைக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில், அவ்வமைப்பின் மாநில ஆலோசகர் பி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில்; தினக்கூலி மற்றும் வெளிஆதாரமுறை தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை மாநிலம் முழுவதுமாக கூலி நிர்ணயம் செய்ய வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது. ஆனால், அரசோ, அரசு அமைப்புகளோ, அரசுசார் நிறுவனங்களோ, சிறுதொழில் நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ, இதை கடைபிடிப்பதில்லை. அரசும் இதை கண்காணிப்பதில்லை. இதனால் தொழிலாளர்கள் தமிழக முழுவதும் உழைப்புக்கேற்ற கூலி பெறாமல் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். இந்த அமைப்பின் மூலம் தினக்கூலி, வெளியாதாரமுறை தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் என அனைத்து தரப்பு தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

















