தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள 9 சிவாலயங்களை நவ கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது கோவில்களும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தலங்களில் உள்ள சிவனை தரிசித்தால் பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த நவகைலாய ஸ்தலங்கள் எப்படி உருவாகின என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் அறிவோம்.
அகத்தியரின் சீடர்களில் ஒருவரான உரோமச முனிவர், சிவ பெருமானை நேரில் தரிசிக்கவும், அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்றும் எனவும் விரும்பினார். இதற்காக தனது குருவான அகத்தியரிடம் வழி கேட்டார். அதற்கு பதிலளித்த அகத்தியர், தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விடு. அந்த 9 மலர்களும் எந்த இடத்தில் கரை ஒதுங்குகின்றனவோ அந்த இடங்களில் சங்கு மூலம் நீராடு.
தாமரைகள் ஒதுங்கிய இடத்தில் நவகிரகங்களின் வரிசையில் சிவ லிங்கங்களை பிரதி~;;டை செய்து, சிவனை வழிபட்டால், சிவ பெருமானின் காட்சி கிடைக்கும். முக்தியும் கிடைக்கும் என்றார். அகத்தியர் சொன்ன படியே 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டு, அவைகள் கரை ஒதுங்கிய இடங்களில் நீராடி, உரோமச முனிவர் முக்தி பெற்றதாக சொல்லப்படுகிறது. அவர் உருவாக்கிய இந்த ஒன்பது சிவாலயங்களே நவ கைலாயங்கள் என அழைக்கப்படுகின்றன.
நவகிரங்களின் முதன் கடவுளாக வீற்றிருக்கும்
- சூரியன் – பாபநாசநாதர் கோவில் – பாபநாசம்
- சந்திரன் – சேரன்மாதேவி கைலாசநாதர் கோவில் – சேரன்மாதேவி
- செவ்வாய் – கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில் – கோடகநல்லூர்
- ராகு – குன்னத்தூர் கோத பரமேஸ்வரர் கோவில் – குன்னத்தூர்
- குரு – முறப்பநாடு கைலாசநாதர் கோவில் – முறப்பநாடு
- சனி – ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் – ஸ்ரீவைகுண்டம்
- புதன் – தென்திருப்பேரை கைலாசநாதர் கோவில் – தென்திருப்பேரை
- கேது – ராஜபதி கைலாசநாதர் கோவில் – ராஜபதி
- சுக்கிரன் – சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில் – சேர்ந்தபூமங்கலம்
இவற்றில் முதல் மூன்று தலங்கள் மேல் கைலாயம் என்றும், அடுத்த மூன்று தலங்கள் நடுகைலாயம் என்றும், கடைசி மூன்று தலங்கள் கீழ் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் குன்னத்தூர் தவிர மற்ற அனைத்து தலங்களிலும் ஈசன், கைலாசநாதர் என்ற திருநாமத்துடனேயே வீற்றிருந்து அருள் செய்கிறார்.
நவகைலாயங்களில் முதல் ஸ்தலமான திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே பாபநாச திருக்கோயில் சூரியனுக்குரியது.
சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தினத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விமலை சக்தி பீடமாகும். ராஜ கோபுரத்தை அடுத்து நடராஜர் தனிச்சன்னதியில் ஆனந்த தாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை புனுகு சபாபதி என்று அழைக்கின்றனர்.
கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்று கொண்டிருக்கையில் வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமண கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார்.

அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர். அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவ~;டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவ~;டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோ~ம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான்.
வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோ~ம் நீங்கும் என்றார்.
அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை “பாபநாசநாதர்’ என்கின்றனர்.
இத்தலத்து லிங்கத்திற்கு ” முக்கிளா லிங்கம்’ என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.
பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார்.
எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்பாள் உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர்.
மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது ஐதீகம்.
கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோ~ம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம்