தேசிய நல்லாசிரியர் விருதுக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த பணி புரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், புதுச்சேரி தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களும் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது.