மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை எம்.எல்.ஏ நகராட்சித் நகர் மன்ற தலைவர் தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்:-
மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை நகராட்சி தூய்மை பணியாளர்கள் 373 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் நகர் மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 373 தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ ராஜகுமார் நகராட்சி நகர் மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் சேர்ந்து அமர்ந்து உணவருந்தினர். இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் ஆடலரசி நகர மன்ற துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்
