சீர்காழியில் நிரா மருத்துவமனையை அமைச்சர்கள் கே.என்.நேரு,மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மகள் டாக்டர் நிவேதா இவர்களுக்கு சொந்தமான நிரா மருத்துவமனையை உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளானோர் கலந்து கொண்டனர்
