மேலூரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா: அஇஅதிமுக சார்பில் கொண்டாட்டம்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்கவும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா அவர்களின் ஆலோசனையின் பேரிலும், மதுரை மாவட்டம் மேலூரில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளரும், மேலூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரியபுள்ளான் (எ) செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேலூர் நகர் கழகம் சார்பில் இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டது.

மேலூர் பேருந்து நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, மேலூர் நகர் செயலாளர் சரவணகுமார் தலைமையில், நகர் அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் நகர்மன்றத் தலைவருமான சாகுல் ஹமீது முன்னிலையில் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த முன்னோடிகள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரும் ‘வாழ்க எம்.ஜி.ஆர்’ என முழக்கமிட்டது மேலூர் நகரையே அதிரச் செய்தது.

இந்த விழாவில் மாவட்ட அளவிலான பல்வேறு பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் சீனிவாசன், எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்கள் நாக சுப்பிரமணியன், ஆனைசேவுகன், அய்யங்காளை, தவபாண்டி, சாலமன் சம்பத், எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர்கள் குமரன், சபாபதி, விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் முத்து மற்றும் சிறுபான்மையினர் பிரிவு பகதூர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், வழக்கறிஞர் அணி திருமேனி, அண்ணா தொழிற்சங்க ராமதாஸ், பாசறை தங்க பாலு ஆகியோருடன் நகர் கழக அவைத் தலைவர் பூச்செண்டு, இணைச் செயலாளர் ரேணுகா, துணைச் செயலாளர் பாண்டிலெட்சுமி மற்றும் பிரதிநிதிகள் திருப்பதி, அறிவழகன், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் கட்சிப் பணிகளை முன்னெடுத்தனர்.

விழாவின் நிறைவாக, மேலூர் நகரின் பல்வேறு வார்டுகளைச் சேர்ந்த வட்டக் கழகச் செயலாளர்கள் சிங்காரம், சரவணன், பாலமுருகன், சிக்கந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். நகர் முழுவதும் அதிமுகவின் இருவண்ணக் கொடிகள் தோரணங்களாகக் கட்டப்பட்டு, புரட்சித் தலைவரின் பாடல்கள் ஒலிக்கச் செய்யப்பட்டிருந்தது. ஏழை எளிய மக்களின் இதயங்களில் இன்றும் நீங்கா இடம்பிடித்துள்ள எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை, மேலூர் நகர அதிமுகவினர் பொதுமக்களுடன் இணைந்து ஒரு மக்கள் திருவிழாவாக மாற்றிக் காட்டினர்.

Exit mobile version