மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு:- தகுதி சான்று கட்டண உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்:-

கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் உயர்த்தி உள்ளன. இதன்படி, ரூ 850 ஆக இருந்த புதுப்பிப்பு கட்டணம் தற்போது 28,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு தங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது என குற்றம் சாட்டி, கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 1000 லாரிகள் இன்று பணியில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் தகுதிச் சான்று கட்டண உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மயிலாடுதுறை தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சீர்காழி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் மனு அளித்து வலியுறுத்தினர். வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version