பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட், கால்பந்து மற்றும் கராத்தே, சிலம்பம் பயிற்சி அளிக்க திட்டம் :
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில், துளசி திரையரங்கம் பின்புறம் எஸ்.கே. ஸ்போர்ட்ஸ் அரேனா எனப்படும் விளையாட்டு அரங்கம் தொடக்க விழா நடைபெற்றது.திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஏ. குமரன். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களது மகன் டாக்டர் சந்தோஷ் ராஜ்-க்கு விளையாட்டுத்துறையில் ஆர்வம் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து கே.எஸ் ஸ்போர்ட்ஸ் அரேனா எனப்படும் விளையாட்டு அரங்கம் தொடங்கி வைக்க தீர்மானிக்கப்பட்டது.அதன்படி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் துளசி தியேட்டர் பின்புறம் விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டது.கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவதற்கு ஏதுவாக உள் விளையாட்டு அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதேபோல் வெளிப்புறத்திலும் கராத்தே சிலம்பம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தொழிலதிபரின் பெற்றோர் அர்ஜுனன் மற்றும் தேவகியம்மாள் ஆசீர்வாதத்துடன் எஸ்.கே. விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.இதில் தொழிலதிபர் ஏ.குமரனின் நெருங்கிய உறவினர்களான பழனிவேல் செட்டியார் குடும்பத்தினர், ராகுல் ராஜ்,யோகராஜ், பரமசிவம், அரி, பித்தன், நடராஜ் தாமு மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
