கர்நாடகா முடா வழக்கு : முதல்வர் சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம் !

மைசூர் :
கர்நாடக மாநிலம் மைசூருவில் நிலம் ஒதுக்கீடு தொடர்பாக இடம்பெற்ற ஊழல் வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை தற்காலிகமாக முடக்கியது.

மைசூர் நகர வளர்ச்சி ஆணையம் (MUDA) முறைகேடு செய்ததாக கடந்த ஆண்டு ஏற்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது.

38,284 சதுர அடி நகர்ப்புற நிலம் வழங்கல் :

சித்தராமையாவின் மனைவியிடம் சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை (MUDA) எடுத்து, அதற்குப் பதிலாக நகரத்தின் மையப்பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நில ஒதுக்கீடு முறைகேடாக நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் — குறிப்பாக பாஜக — குற்றம்சாட்டியுள்ளன.

ED நடவடிக்கை :

இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை (ED) விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, சித்தராமையா மற்றும் மற்ற தொடர்புடையவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“முடா வழக்கில், முதல்வர் சித்தராமையாவிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. இதற்கு மேல், மற்ற தொடர்புடைய நபர்களிடமிருந்து ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version