சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசும் இதேபோல் ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்மை வழங்கியுள்ளது.
இதன்படி, தற்போதைய அகவிலைப்படி 55 சதவீதத்திலிருந்து மேலும் 3 சதவீதம் உயர்த்தி 58 சதவீதமாக வழங்கப்படவுள்ளது. புதிய அகவிலைப்படி 2025 ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலாகும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இந்த உயர்வால் மாநிலத்தின் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறவுள்ளனர். இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,829 கோடி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அரசு ஊழியர் வட்டாரத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது.
