ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு

மேற்கோடையும் மத்திய கிழக்கையும் உலுக்கும் வகையில், ஈரான் நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் போது, ஈரானின் 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களாக நிலவும் நிலவரம் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்கள், அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் அவசரமாக தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.

“ஈரான், அணு ஆயுத திட்டத்தை முற்றிலும் கைவிடும் வரை போராட்டத்தை நிறுத்தமாட்டோம்,” என இஸ்ரேல் அரசு கடுமையான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நிலையங்கள் தற்போது செயலிழந்துள்ளன,” என அறிவித்துள்ளார்.

இருப்பினும், இத்தாக்குதல்களை உலக நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரஷ்யா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள், அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலை சர்வதேச சட்டத்திற்கே எதிரானது என விமர்சிக்கின்றன.

இந்நிலையில், ஈரானில் மேலும் ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. “இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அளவு வான்வழி தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்,” என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version