ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்று மனதில் வைத்து களத்தில் இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார், அதன்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என திருவாரூரில் மாநிலங்களவை உறுப்பினர் உறுப்பினர் கனிமொழி சோமு பேட்டி…
திருவாரூர் பிப்,16-
ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் திருவாரூரில் இன்று மாலை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினரும், மாநில மருத்துவ அணி தலைவருமான கனிமொழி சோமு, திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்தமிழர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பல்வேறு புகைப்படங்களையும், வரலாற்று ஆவணங்களையும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும் போது….
திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் அண்ணாவின் கோட்பாடான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பின்பற்றுகிறார்கள். அத்தைய கட்டுப்பாட்டிற்கு ஏற்ப இரண்டு கட்சியின் தலைவர்கள் பேசும்போது மற்றவர்கள் யாரும் அது பற்றி எந்த கருத்தும் பேசக்கூடாது. இரு தலைவர்களும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் என்றார். தேர்தல் காலகட்டத்தில் எல்லா கட்சிகளுடனும் எல்லோரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். யார் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்று மனதில் வைத்து களத்தில் இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அந்த அறிவுரையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார். இடைக்கால பட்ஜெட் முடித்த பிறகு கூட்டணி தொடர்பாக பேசலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பார் என்றார்.
பேட்டி : கனிமொழி சோமு – மாநிலங்களவை உறுப்பினரும், மாநிலமருத்துவ அவர்கள் அணி தலைவருமான டாக்டர்.கனிமொழிசோமு
