210 தொகுதி என்று சொல்வதால், நான் 220 என்று சொல்ல வேண்டுமா? – உதயநிதி ஸ்டாலின்

கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதியில் உள்ள கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்,
தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பரப்புரையில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பேசி வருவது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர், அதற்காக நான் 220 என்று சொல்ல வேண்டுமா? அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதை மக்கள் தான் முடிவெடுப்பார்கள். நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம். முதல்வர் மக்களை சந்தித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர் பணியை செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.

Exit mobile version