இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று, மருத்துவர்களிடமும், அவரது உறவினர்களிடமும் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். அப்போது, நல்லகண்ணுவின் நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நல்லகண்ணுவின் பேரன் மூலமாக அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.
