பழனிச்சாமிக்கு தேவைப்பட்டால் கூவத்தூர் ஆதாரங்களை வெளியிடுவேன் – நடிகர் கருனாஸ்

சிவகங்கை அருகே பனங்காடியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாடு வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீட்டிற்காக ரூ15,516 கோடி ஈர்த்து 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உறுதியளித்துள்ள தமிழக முதலவர் ஸ்டாலினை பாராட்டுவதாகவும், 2026 தேர்தலில் பிஜேபி அரசியல் ஆதாயம் தேட அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது அவர்களின் முகத்திரையை வெளிக்கொணர பிஜேபியின் தமிழர் விரோதப் போக்கை எடுத்துரைக்க ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் முயற்சியில் பிஜேபியின் அரசியல் சூதாட்டம் குறித்து 400 பக்கத்தில் புத்தகம் எழுதி வருகிறேன். அதில், கீழடி, விவசாயம், நீட்டுக்கு எதிராக செயல்படும் பிஜேபியின் முகத்திரையை கிழிக்க எளிமையாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி உள்ளேன் அதனை தமிழக முதல்வர் வெளியிட திட்டமிட்டுள்ளேன்.

நூறு ஆண்டுகள் கடந்தாலும் அதிமுக எஃக்குக்கோட்டையாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மாவும் உருவாக்கியதை எடப்பாடி பழனிச்சாமி தற்போது சுற்றுபயணத்திலேயே மக்கிய கோட்டையாக மாற்றும் முயற்சியில் முழு மூச்சாக மாற்றி வருகிறார்.

கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சர் ஆக்கப்பட்டார் என்ற விவரத்தை வெளியிடுவது அரசியல் நாகரிகம் இல்லை. பச்சை பொய் சொல்லும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டால் கூவத்தூர் ஆதாரங்களை வெளியிடுவேன் என்றார். மூத்த தலைவர் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன்.

நம்பிக்கை துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி அவர் வாழும் காலத்திலேயே அதற்கான பலனை அனுபவிப்பார். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என 2016 சட்டமன்ற கூட்டத்தில் நான் கூறிய போது அதனை ஏற்காத அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கபட நாடகம் ஆடுகிறார்.

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் பிரிக்க வேண்டும், அளிக்க வேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை. அதனை எடப்பாடியை நிறைவேற்றுவார். பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அதிமுகவிற்கு ஆதரவு தரமாட்டேன். சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர் தன ஓபிஎஸ் . சசிகலா சிறைக்கு சென்றது யாரால் என்பது அனைவருக்கும் தெரியும், TTV தினகரன் ஆர் கே நகரில் போட்டியிடாமல் இருந்திருந்தால் இந்த குழப்பங்களை ஏற்பட்டு இருக்காது, முக்குலத்தோர் சமுதாயத்தின் அரசியல் அடையாளத்தை திட்டமிட்டு அளித்தது பிஜேபி. அதற்கு துணையாக இருந்தவர்கள் இவர்கள் என்றார்.

நைனார் நாகேந்திரன் புனிதர் அல்ல. அவரும் அரசியல் குட்டையில் ஊறிய மட்டை போலத்தான். முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்காகவே நைனா நாகேந்திரன் பாஜக தலைவர் ஆக்கியுள்ளது. புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை கார்ப்பரேட் முறையில், சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் நடத்தி விடலாம் என அவர் நினைக்கின்றார். தமிழர்கள் வாழ்வு நலம் பெற யார் வந்தாலும் நான் அவர்களை வரவேற்கின்றேன் என்றார். விஜய் பெரிய நடிகர் அவருக்கு கூட்டம் வரும்.

எல்லா தவறுகளும் செய்து விட்டு தன்னை உத்தமர் போல வேஷம் போடுகின்றார் எடப்பாடி பழனிச்சாமி. அவரிடம் உண்மை, நன்றியினை எதிர்பார்க்க முடியாது. அவர் எப்படி தமிழக மக்களுக்கு உண்மையாக இருப்பார் எனக் கேள்வி எழுப்பினார். குற்றச்சாட்டு இல்லாத அரசியல்வாதிகள் யாரும் இல்லை. திருவாடானைத் தொகுதி ஆர் எஸ் மங்கலம் கண்மாய் ஒதுக்கப்பட்ட நிதியை எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக எடுத்துச் சென்றார் எனக்கு குற்றம் சாட்டினர். மேலும் அரசியலில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை என்றார். ஆனால் மக்கள் நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சியினை படுகுழியில் தள்ளும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அமையும், அப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எங்கே இருக்கும் என்று கூட தெரியாது. ஆனால் அதிமுக நன்றாக இருக்க வேண்டுமென செங்கோட்டையன் போன்று நானும் நினைக்கின்றேன். மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியே வெற்றி பெறுவதே கடினம். செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கியதால் கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் உள்ளனர் எனவே அவரது இன மக்களை அவரை தோற்கடிப்பார்கள் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

Exit mobile version