அய்யாவை நான் பார்க்கலையா ? இதுலையுமா அரசியல்.. கொச்சைப்படுத்தாதீங்க ! வேதனையுடன் பேசிய அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உடல்நிலை பாதிப்பால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் முழுமையான இதய பரிசோதனைகள் செய்து, அவருக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் நலம் உள்ளது என்று தெரிவித்தனர்.

நேற்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை முடிந்த பின்னர், ரத்தக் குழாய்களில் அடைப்பு இல்லை என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவமனையில் அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நகேந்திரன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் சந்தித்து, நலனுக்காக வாழ்த்தினர்.

இந்த நிலையில், ராமதாஸின் மகனும் பாமக தலைவர் அன்புமணியும் மருத்துவர்களுடன் ஆலோசனை செய்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட வீடியோ, ராமதாஸ் வார்டில் பேசும் போல் தோன்றியது. இதனால், “அன்புமணி நேரில் சந்திக்கவில்லை” என விமர்சனங்கள் எழுந்தன.

இதுபோல அரசியல் பரபரப்புக்கு இடமளிக்க வேண்டாம் என, அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது :

“அப்பல்லோவில் அய்யா நார்மல் செக் அப்பிற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை பழைய நிலையில் தான் உள்ளது. மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளனர். நான் அவரை நேரில் சந்திக்காததை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.”

அன்புமணி ராமதாஸ் கூறியதுபோல், தந்தை-மகன் உறவை “கொச்சைப்படுத்த வேண்டாம்” என்பதும் முக்கியமானது. டாக்டர் ராமதாஸ் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமாக உள்ளார்.

Exit mobile version