திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி சாலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி சாலை முன்பு ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையினை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து மாநில செயற்குழு உறுப்பினர் டி.சீனிவாசன் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.காந்திமதிநாதன் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.அப்போது, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களின் நேரடி வங்கி கணக்கிற்கு விடுவிக்க வேண்டும். ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்களுக்கு பணிமதிப்பீடு அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணியாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதி, காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். நகர்ப்புற பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிறைவாக ஹோமேஸ்வரன் நன்றி கூறினார்.
