மயிலாடுதுறை வழியாக மேற்குவங்கம் மாநிலம் நியூஜல்பைகுரி செல்லும் புதிய அம்ரித் பாரத் ரயிலுக்கு மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரயில் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .
தமிழ்நாட்டின் நாகர்கோயிலில் இருந்து மேற்குவங்க மாநிலம் நியூஜல்பைகுரி வரையில் புதிய அமிர்த பாரத் ரயில் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோயில் மதுரை திருச்சி தஞ்சை மயிலாடுதுறை வழியாக இந்த ரயில் மேற்குவங்க மாநிலத்திற்கு செல்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதி வடகிழக்கு பகுதிகளுடன் ரயில் மூலம் நேரடியாக இணைக்கப்படுகிறது. 14 முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயில் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் பெறுவர். இன்று நாகர்கோவிலில் இருந்து கிளம்பியா ரயில் பிற்பகலில் மயிலாடுதுறைக்கு வருகை புரிந்தது. இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரயிலுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் லோகோ பைலட் மற்றும் ரயில் பயணிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்வதாக அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அப்போது தெரிவித்தார்.
