தொடர்ந்து போராடும் ஜனநாயகன் -உச்சநீதிமன்றத்தில் முறையீடு

ஜனநாயகன் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரிய உறுப்பினர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் மறுஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

தணிக்கை சான்றிதழ் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி ஆஷா, ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக யுஏ சான்றிதழ் வழங்க நேற்று காலையில் உத்தரவிட்டார்.
இதற்கு எதிரான தணிக்கை வாரியத்தின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா, நீதிபதி அருள் முருகன் அமர்வு, தணிக்கை வாரியத்துக்கு அவகாசம் வழங்காதது ஏன் என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து, விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வின் தடை உத்தரவை எதிர்த்து, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மனுவை நாளை மறுநாள் அவசர வழக்காக விசாரிக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version