தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கடந்த சில மாதங்களாகவே ராக்கெட் வேகத்தில் ஏறி வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, இந்த விலை உயர்வு என்று தெரியவந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ஒரே நாளில் 3 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு காலையில் 12 ரூபாய் உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் 10 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் கிலோவுக்கு 22 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பங்குச்சந்தைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டது. சென்செக்ஸ் குறியீடு ஆயிரத்து 65 புள்ளிகள் குறைந்து, 82 ஆயிரத்து 180 புள்ளிகளாக நிறைவடைந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி குறியீடு 353 புள்ளிகள் சரிந்து, 25 ஆயிரத்து 232 ஆக முடிவடைந்தது. கிரின் லாந்து விவகாரத்தில் டிரம்ப் பிடிவாதமாக உள்ளதால், சர்வதேச பங்குச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியப் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

















