எடப்பாடி பழனிச்சாமியுடன் பிஜேபி குழு இன்று சந்தித்து பேச்சுவார்த்தை ந டத்துகிறது. இதனிடையே, அதிமுக-விடம் அதிக சீட் கேட்டு தொந்தரவு செய்யமாட்டோம் என்றும், கூடுதல் தொகுதிகளைவிட, யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதே பிஜேபி-யின் நோக்கம் என்றும், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கிராமத்தில் இதனை தெரிவித்த அவர், அன்புமணியை தொடர்ந்து இன்னும் சில கட்சிகள் தங்களது கூட்டணி வரும் என்றார். விரைவில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, கூட்டணியில் பல கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை நடத்துவேன் என்றும், அதிக சீட் கேட்டு அவர்களை தொந்தரவு செய்யமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிஜேபி-க்கு சாதகமான தொகுதிகளை மட்டுமே கேட்டுப் பெறுவோம் என்றும், யாருக்கும் நெருக்கடி தராமல், கூட்டணியில் அனைவரும் சுதந்திரமாக செயல்படுவோம் என்றும், நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை நயினார் நாகேந்திரன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழு இன்று சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.

















