அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர்.

வெள்ளை மாளிகை வடமேற்கு பகுதியில் நேற்றிரவு திடீரென நுழைந்த ஒரு மர்ம நபர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கி சுட்டுள்ளார். இதில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக மற்ற பாதுகாவலர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். இதில் அந்த நபரும் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் என்பது தெரியவந்தது.

Exit mobile version