வீட்டுமனையை பதிவு செய்ய, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, தாம்பரம் பெண் சார் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் பிரவின்குமார். இவர், நெடுங்குன்றத்தில் வாங்கிய 2 ஆயிரத்து 400 சதுர அடி நிலத்தை பதிவு செய்ய, தாம்பரம் சார் – பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சார் – பதிவாளர் ரேவதி, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பத்திரப்பதிவின்போது, 2 லட்சம் ரூபாய் தருவதாகவும், மீதி 8 லட்சம் ரூபாயை, பத்திரம் வாங்கும்போது, தருவதாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவின்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, அவர்களது ஆலோசனைப்படி, லஞ்சம் கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.
















