இந்தியா சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புடன் முன்னேறி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 72-வது தேசிய கைப்பந்து சாம்பியன் போட்டிகளை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி விளையாட்டு துறையில் உலக அளவில் இந்திய வீரர்கள் சாதனை படைத்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான முயற்சியில் இந்தியா முழுவீச்சில் இறங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
