தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்யும் – ஆரஞ்சு அலெர்ட்

வெள்ளிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சனிக்கிழமை அன்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

ஞாயிறன்று கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

Exit mobile version