ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்தது – கலக்கத்தில் நகை வாங்குவோர்

ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக, ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று சவரனுக்கு மேலும் 160 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும், சவரனுக்கு 3 ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு, நகை வாங்கும் எண்ணத்தில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு, கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் ஒரு கிராம் தங்கம், 12 ஆயிரத்து 820 ரூபாயாகவும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 560 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version