கோவை- மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கியுள்ள மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நாளை மற்றும் நாளை மறுதினம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் – மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய பிஜேபி அரசு தற்போது கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளதாக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் பிஜேபி அரசை கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி‘களின் சார்பில் வரும் வியாழக்கிழமை கோவையிலும், வெள்ளிக்கிழமை மதுரையிலும் காலை 10.00 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



















