சபரிமலை செல்லும் குடியரசுத் தலைவர் – இன்றும் நாளையும் பக்தர்களுக்கு தடை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கேரள மாநிலம் செல்கிறார்.
சபரிமலையில் இன்றும், நாளையும் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இன்று திருவனந்தபுரத்திற்கு வருகை தரும் அவர், ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு, நாளை காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர், இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். பின்னர் வர்க்கலாவில் நாராயண குரு ஆசிரமத்தில் நடைபெறும் நிகழ்ச்சி உள்பட 24-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி இன்றும், நாளையும் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Exit mobile version