தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னை விமான நிலைய வருகை பகுதியில், 3டி பெரிய ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டு, இயற்கை காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
உள்நாட்டு வருகை பகுதி 1 மற்றும் 3 முனையங்களிலும், மற்றும் சர்வதேச முனையம் வருகை பகுதி 2 முனையத்திலும், தீபாவளி பண்டிகையை ஒட்டி, பெரிய அளவில், 3 டி எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், இயற்கை எழில்கள், சுற்றுலா தளங்களில் உள்ள சிறப்பு காட்சிகள், வனவிலங்குகள், கிராமப்புற விளையாட்டுகள், நமது நாட்டின் பண்பாடுகள் போன்றவை குறித்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பயணிகள் மத்தியில் ஒரு புதிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் இது ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த 3 டி எல்இடி திரைகளை நிரந்தரமாக வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

















