அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பிஜேபி தேர்தல் பொறுப்பாளர்கள், சென்னையில் ஆலோசனை நடத்தினார்கள்.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ், அதிமுகவும் பிஜேபியும் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்த கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா? அல்லது அதிமுக தனித்து ஆட்சி அமைக்குமா? என்ற விவகாரத்தில், இரு தரப்பினருக்கும் இடையே, கருத்து மோதல் நிலவி வருகின்றது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரம், கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழகத்துக்கான பிஜேபி மேலிட தேர்தல் பொறுப்பாளர்கள் பைஜெயந்த் பாண்டா மற்றும் முரளிதர் மொஹோல் ஆகியோர், சென்னைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இன்று எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். அப்போது பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தார்.
தொகுதி பங்கீடு குறித்தும், தேசிய ஜனநாய கூட்டணிக்குள், மேலும் சில கட்சிகளை கொண்டு வருவது பற்றியும், அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

















