மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக விமர்சித்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரதிநிதியாக உள்ளவருக்கு நாவடக்கம் தேவை என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலை குறித்து எதுவும் தெரியாமல், “நாம் தான் நம்பர் 1 முதல்வர்” என்ற மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒருவரை தலைவராகக் கொண்ட மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாகத் தான் தெரிவார்கள் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவதுபோல. உங்களது கீழ்த்தரமான, ஆணவம் மிக்க அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்களுக்கு, தமிழக மக்கள் 2026-க்குப் பிறகு அரசியலை விட்டே துரத்திவிடுவது உறுதி என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம் பியான ஆ.ராசா அமித் ஷா குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.