சென்னை :
சென்னை பேசன்ட் நகர் கடற்கரையில், 22 வயது மென்பொறியாளர் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இளம்பெண் தனது ஆண் நண்பர்களுடன் பேசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணிடம் அத்துமீறல் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை எதிர்த்த இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர்கள், தாங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதாக தெரிவித்ததாகவும், பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினருடனும் தகராறு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் காவல்நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், வேளச்சேரியைச் சேர்ந்த சாய் ஸ்ரீதரன் (வயது 30), சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
அத்துடன் அவருடன் இருந்த மற்ற மூன்று வழக்கறிஞர்களிடம் எழுத்து மூலத்தில் உறுதி பெற்று எச்சரிக்கையுடன் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் வழக்கறிஞர்களின் ஒழுங்கு மற்றும் பொறுப்புறுதியை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பேசன்ட் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.