மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 6,03,439 வாக்குகள், மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்பு இடையே தபால் வாக்கு என்னும் பணி தொடங்கியது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 23.4.2026 நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 6,03,439 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன் வாக்கு சதவீதம் 82.09 ஆகும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி(தனி) தொகுதியில் 1,19,539 ஆண் வாக்காளர்கள்;, 1,21,767 பெண் வாக்காளர்கள்;, 13 மூன்றாம் பாலினத்தவர்களும் என 2,41,319 ஆகும். இவர்களில், 94,395 ஆண் வாக்காளர்கள், 1,04,418 பெண் வாக்களர்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1,98,821 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவீதம் 82.39 ஆகும்.
மயிலாடுதுறை தொகுதியில் 1,15,452 ஆண் வாக்காளர்கள்;, 1,19,076 பெண் வாக்காளர்கள்;, 26 மூன்றாம் பாலினத்தவர்கள்; என 2,34,554 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 89,534 ஆண்கள், 97,120 பெண்கள், 19 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,86,673 வாக்காளர்கள்; வாக்களித்தனர். வாக்கு சதவீதம் 79.59.
பூம்புகார் தொகுதியில் 1,27,948 ஆண் வாக்காளர்கள், 1,31,306 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தவர்கள்; என 2,59,262 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,02,358 ஆண்கள், 1,15,581 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 21,79,45 பேர் வாக்களித்தனர். வாக்கு சதவீதம் 84.06 ஆகும். மயிலாடுதுறை தொகுதியில் 20வேட்பாளர்களும், சீர்காழி தொகுதியில் 10 வேட்பாளர்களும், பூம்புகார் தொகுதியில் 13 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 7,35,135 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 6,03,439 பேர் வாக்களித்தனர். மாவட்டத்தில் பதிவான வாக்குகள் விகிதம் 82.09 ஆகும். பதிவான வாக்குகள் அனைத்தும் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை துவங்கியது, ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. சீர்காழி தொகுதியில் 21 சுற்றுகளும், மயிலாடுதுறை தொகுதியில் 21 சுற்றுகளும், பூம்புகார் தொகுதியில் 24 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. Strong roomல் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து முதற்கட்டமாக காலை ஏழு முப்பது மணி அளவில் முதல் தபால் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
