- சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரருடன் நேற்று கோர்ட்டில் ஆஜரானார். இதில் 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
- தி.மு.க.,வைச் சேர்ந்த ஶ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஶ்ரீதரன், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை டாக்டர் மரிய வில்சன், மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் த.வெ.க.,வில் இணைந்தனர்.
- ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.,வில் இணைந்தார். அவர் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
- ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க நியமிக்கப்பட்ட சர்வ கட்சி எம்.பி.,க்கள் குழுவினரை மோடிஇன்று சந்தித்து விருந்து அளிக்க உள்ளார்.
- ராகுல் பொறுப்பற்று எதிர்க்கட்சி தலைவராக உள்ளார், கடவுள் அவருக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்,’ என்று பா.ஜ., தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
- நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், கடந்த 10 ஆண்டுகளில் நக்சல் வன்முறை சம்பவங்கள் 53 சதவீதம் குறைந்துள்ளது. இது நக்சல் ஒழிப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
- டில்லியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 66 பேரை போலீசார் கைது.
- இந்தியாவுடன் பரஸ்பர உறவை விரும்புவதாக பிரதமர் மோடிக்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் கடிதம் எழுதியுள்ளார்.
- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன. இந்நிலையில், அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் சிறந்த அமெரிக்க நகரமாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ், சட்டவிரோத குடியேறிகளாலும், குற்றவாளிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
- ஈரானில் உள்ள 20 நகரங்களில் நாய்களை தெருக்களில் வாக்கிங் அழைத்துச் செல்வதற்கான தடையை அந்நாட்டு அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.