- ஜாதி வாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க., அரசு, பா.ஜ.,வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது,” என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.
- காவல் ஆய்வாளர் பதவி உயர்வில் பாகுபாடு ஏன் என்றும், தகுதியுள்ள காவலர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
- சத்துணவில் புழு நெளிவதால் உண்ண முடியவில்லை என்று ஏழை குழந்தை கூறும் நிலையில் இது தான் திராவிட மாடலா, என்று மாநில பா.ஜ., தலைவர் நயினார் நகேந்திரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
- திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகம் ஏற்படுகிறது என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
- செய்தித் தாள்களைக் கூட படிக்காமல் அரைவேக்காட்டுத்தனத்தோடு என்னை விமர்சிக்கிறார் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி’ என தமிழக முதல்வர் ஸ்டாலின், தஞ்சையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
- ஆமதாபாத் விமான விபத்தை படம் பிடித்த 17 வயது சிறுவனின் வீடியோ விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், விமானத்தை பார்த்து படம்பிடிப்பதில் ஆர்வம் காட்டிய வந்த அந்த சிறுவன், விபத்தை பார்த்து பயந்து போன நிலையில் காணப்படுகிறார்.
- முன்னாள் அக்னிவீரர்களின் பதவிக்காலம் முடிந்ததும் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அரசு துறைகளில் பணி வாய்ப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- பாரக்ஸ் ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாக, ஏழு நகரங்களில் நடத்திய சோதனையின் அடிப்படையில், ரூ.160 கோடி மதிப்புள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
- அமெரிக்காவின் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும், என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், இதில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் அணுசக்தி மையம் ஒன்றை ஈரான் அமைத்து உள்ளது.