February 12, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குமரி முதல் சென்னை வரை ‘பசுமைப் பயணம்’:   திண்டுக்கல்லில் வரவேற்பு!

by sowmiarajan
November 13, 2025
in News
A A
0
குமரி முதல் சென்னை வரை ‘பசுமைப் பயணம்’:   திண்டுக்கல்லில் வரவேற்பு!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 780 கி.மீ தூரம் சைக்கிளில் பயணிக்கும் குழுவினருக்கு திண்டுக்கல் நகரமே திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளித்தது. திண்டுக்கல்லில் சுமார் 10,000 மரக்கன்றுகள் நடவு செய்து குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் நீதி மற்றும் இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகத்தான நோக்குடன், குமரி முதல் சென்னை வரை ‘பசுமைப் பயணம்’ என்ற பெயரில் சைக்கிள் பேரணி ஒன்று நடைபெற்று வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதிலும் இருந்து துறவியர் பேரவையைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர், கல்லூரி மாணவ-மாணவியருடன் இணைந்து இந்த சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 5-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம், 780 கிலோமீட்டர் தூரத்தை 16 நாட்களில் கடந்து சென்னையில் நிறைவடைய உள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயணத்தின் ஒரு பகுதியாக, குழுவினர் திண்டுக்கல் நகருக்கு வருகை தந்தனர். அவர்களுக்குப் பேகம்பூர் அவர்லேடி பள்ளிக்கு முன்பாக உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. துறவியர் பேரவை டிஎன்பி தலைவர் அருள்மிகு அன்னை மரிய பிலோமி. தலைமை வகித்தார். திண்டுக்கல் துறவியர் பேரவைத் தலைவர் மரிவளன். முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் சார்பில் அருள் முனைவர் பிலிப் சுதாகர், திண்டுக்கல் திருவருள் பேரவைத் தலைவரும் ஜிடிஎன் கல்வி நிறுவனங்களின் தலைவருமான முனைவர் ரத்தினம், சிம்கோடெஸ் இயக்குனர் விசுவாசம் என்ற ஞான திரவியம் ஆகியோர் குழுவினரைப் பாராட்டிப் பேசினர்.

திண்டுக்கல் நகர மக்களின் சார்பில் நகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் மற்றும் நகர துணை மேயர் ராஜப்பா ஆகியோர் தலைமையேற்று குழுவினரை வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பசுமைப் பயணக் குழுவினருக்கு திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் பாரம்பரியமான பறையிசையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த விழிப்புணர்வுப் பயணத்தின் முக்கிய அம்சமாக, குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்து, இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர். சைக்கிள் பேரணிக் குழுவினர் திண்டுக்கல் அருகே உள்ள நல்லம்மாநாயக்கன் பட்டியில் தங்கினார்கள். மறுநாள், திருச்சி சாலை கல்லறை தோட்டம் அருகே பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், சேவைச் சங்கங்கள், திண்டுக்கல் மறைமாவட்ட துறவியர் பேரவை மற்றும் தோழமை நிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் எனப் பலதரப்பட்டவர்களும் ஒன்றிணைந்து குழுவினருக்கு மீண்டும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் முடிவில், குழுவின் சார்பில் நிக்கோலஸ் நன்றி கூறினார். கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை செல்லும் இந்த ‘பசுமைப் பயணம்’, செல்லும் வழியெங்கிலும் மக்களின் பேராதரவுடன் சுற்றுச்சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.

Tags: clean energy transportdindigul welcomeeco friendly journeyeco tourismgo green indiagreen india movementgreen journeyheritage and naturekumari to chennainature travelResponsible Tourismsouth india travelsustainable traveltamil nadu trip
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

Next Post

முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுடன் ‘Coffee with Collector’ –திண்டுக்கல் முன்னுதாரணம்!

Related Posts

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு
News

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி
News

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை
News

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 
News

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026
Next Post
முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுடன் ‘Coffee with Collector’ –திண்டுக்கல் முன்னுதாரணம்!

முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுடன் ‘Coffee with Collector’ –திண்டுக்கல் முன்னுதாரணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

July 31, 2025
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

0
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

0
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

0
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

0
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026

Recent News

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சியில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விடியா DMKஅரசு 40 நாட்களாக குறைத்து ஏமாற்றிவேலை

February 11, 2026
விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

விழுப்புரம் பொது விநியோகத்திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் 

February 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.