திருச்செந்தூர்: பிரபல யூடியூபரும், நடிகருமான ஜி.பி. முத்து, தனது ஊரான உடன்குடி, பெருமாள்புரத்தில் ஒரு தெரு காணாமல் போயுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
எங்கிருக்கு கீழத் தெரு?
ஜி.பி. முத்துவின் புகாரின்படி,
- நத்தம் சர்வே எண் 233 / 21ல் இருந்த “கீழத்தெரு” எனும் தெருவை கடந்த 20 ஆண்டுகளில் சில தனிநபர்கள் ஆக்கிரமித்துவிட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
- அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த இந்த பாதை தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லை எனவும்,
- “அத்திப்பட்டி” போல மறைந்துபோன இந்த தெருவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“தீக்குளிக்க நேர்ந்தாலும் நியாயம் கேட்பேன்!”
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததையடுத்து, செய்தியாளர்களிடம் ஜி.பி. முத்து பேசுகையில்,
“மறைந்த தெருவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த முறை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க நேரிடும்” என கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஊரில் உள்ள ஒரு கோயில் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், கள்ளப்பத்திரம் மூலம் வாங்க வைக்க முயற்சி நடைபெறுவதாகவும் புகார் அளித்துள்ளார்.
அதிகாரிகளின் நடவடிக்கை எதிர்பார்ப்பு
பொதுமக்கள் செல்லும் பாதை மறுக்கப்படுவதால், சமூக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.