667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் பாட புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார் , தொடர்ந்து தன்னை போல் நன்றாக படித்து மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என மாணவர்களிடம் தெரிவித்தார் :-

கோடை விடுமுறைக்குப் பின்பு தமிழகத்தில் இன்று பள்ளிகள் தொடங்கப்பட்டது. பள்ளியின் முதல் நாளான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் 667 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இன்று வழங்கப்பட்டன. மயிலாடுதுறை அடுத்த மூவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பங்கேற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும் பொழுது பள்ளி மாணவர்கள் பள்ளி பருவத்தில் பாடப் புத்தகங்களை கவனமுடன் படித்து எதிர்காலத்தில் தன்னை போல் நன்றாக படித்து மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 74703 மாணவ மாணவிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை இன்றைய செயல்படும் 106 உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 74474 மானா மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version